ஜெயலலிதாவின் உதவியாளரிடம் 2-வது நாளாக இன்றும் விசாரணை….!

2-வது நாளாக இன்றும் பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.  கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக யார், யாரிடம் விசாரிக்கப்படாமல் இருந்தார்களோ, அவர்களை தற்போது தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை சசிகலா, விவேக் ஜெயராமன், மேலாளர் நடராஜன், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி,  சஜீவன் உள்ளிட்ட 200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் அதிமுக பிரமுகர் … Read more

அதிர்ச்சி : நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த சத்துணவு கூடத்தில் குட்டியானையின் எலும்புக் கூடு..!

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் நீண்ட நாளாக மூடப்பட்டு  சத்துணவு கூடத்தில் உடல் சிதைந்த நிலையில் கிடந்த குட்டியானையின் எலும்புக்கூட்டை மீட்டு வனத்துறையினர் விசாரணை. கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் உடல் சிதைந்த நிலையில் குட்டியானையின் எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. இந்த எலும்புக்கூடானது, நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த தொடக்கப்பள்ளியின் சத்துணவு கூடத்தில்  கிடந்துள்ளது. இதனையடுத்து, வனத்துறை அதிகாரிகள் எலும்புக் கூட்டை கைப்பற்றி  குட்டியானை எப்படி இறந்தது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிராம நிர்வாக ஊழியரை காலில் விழ வைத்த சம்பவம்..! 3 மணி நேர விசாரணைக்கு பின் மாலை ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு…!

கிராம நிர்வாக ஊழியரை காலில் விழ வைத்த சம்பவம் தொடர்பான விசாரணை நிறைவுற்ற நிலையில், இன்று மாலை ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தகவல். கோவை  மாவட்டம், ஒற்றர்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில்,  கோபிநாத் என்பவர்  வந்துள்ளார். இவர் நிலம் சம்பந்தமான சில விவரங்களை கேட்டறிவதற்காக வந்துள்ளார். அப்போது விஏஓ கலைச்செல்வி சரியான ஆவணங்கள் இல்லாததால், சரியான ஆவணங்களை கொண்டு வருமாறு கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த கோபிநாத் விஏஓ கலைச்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அப்போது, தகராறில் ஈடுபடும் … Read more

காதலரால் எரித்து கொலை செய்யப்பட்ட பெண்ணியவாதி! விசாரணையின் போது வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!

இன்று உலகம் முழுவதும் பெண்களுக்கான  கேள்வி குறியாக  தான் மாறியுள்ளது. அந்த வகையில், துருக்கியின் மென்டீஸ் பகுதியில் வசித்து வருபவர் பினார் குல்டெக் (27). இவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து குரல் கொடுத்து வருபவர். இவரை கடந்த சில நாட்களாகவே காணவில்லை. இந்நிலையில், இவரது காதலர் இவரை எரித்து கொன்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது காதலரான செமல் மெடின் அவ்சி, சம்பவத்தன்று துண்டு துடான மாமிசங்களை எரித்து உள்ளார். அப்போது, … Read more

நியூசிலாந்து கன்மேன் துப்பாக்கி சூடு முடிந்ததும் மசூதிகளை எரிக்க திட்டம் – வழக்கறிஞர் ஹவ்ஸ்

நியூசிலாந்து கன்மேன் துப்பாக்கிசூடு முடிந்ததும் மசூதிகளை எரிக்க திட்டம். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி, நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கி சூட்டில் 57 பேர் பலியாகினர். ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பயங்கரவாதியான பிரெண்டன் டாரண்ட் (வயது 25) தான் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை முகநூல் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்தார். இதனையடுத்து, இவர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டு … Read more

டெல்லியில் சீன நிறுவனங்கள் மீது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

சீன நிறுவனங்கள் மீது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை. டெல்லியில் உள்ள சீன நிறுவனங்களில், சில இந்தியர்களுடன் சேர்ந்து ஹவாலா மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபடுவதாக வருமான வரி துறைக்கு புகார் வந்ததையடுத்து, வருமான வரித்துறையினர் டெல்லியில் சந்தேகத்திற்கு இடமான சீன நிறுவனங்கள் மீது அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 40 போலி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு ஆயிரம் கோடி ரூபாய்க்கு பண பரிவர்த்தனை நடந்திருப்பதும், இதில் வங்கி ஊழியர்கள், ஆடிட்டர்களுக்கு தொடர்பிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்ட … Read more

சாத்தான்குளம் விவகாரம் : 2 மணி நேரம் பென்னிக்ஸ்-ஜெயராஜ் இல்லத்தில் விசாரணை

பென்னிக்ஸ்-ஜெயராஜ் இல்லத்தில் இரண்டு மணி நேரம் விசாரணை. சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் இருவரும் காவலர்களால் சிறையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பான போலீசாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக,  சாமதுரை, செல்லத்துரை, வெயிலுமுத்து ஆகிய மூன்று பேரை காவலில் எடுத்துள்ள சிபிஐ அதிகாரிகள் அவர்களை சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து 4 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து … Read more

கோவையில் பரபரப்பு! பெரியார் சிலைக்கு காவி சாயம் ஊற்றிய மர்ம நபர்கள்!

பெரியார் சிலைக்கு காவி சாயம் ஊற்றிய மர்ம நபர்கள். கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்தததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த தி.க. மற்றும் திமுகவினர் அங்கு குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடியவர்களை தப்ப விடக் கூடாது – அன்புமணி ராமதாஸ்

பெண்களையும், குழந்தைகாலையும் சீரழிக்கும் கொடியவர்களை தப்பவிடக் கூடாது. திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர் பாளையத்தில் வசித்து வருபவர், பெரியசாமி. இவரின் 14 வயது மகள், நேற்று ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள முள்ளுக்காட்டில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து, சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பு வைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக திருச்சி மண்டல ஐஜி ஜெயராம் கூறுகையில், சிறுமி எரிந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல்ஹக் … Read more

என் வீட்டிற்கு வந்து குப்பையை சுத்தம் செய்ய வேண்டும்! மறுத்து பேசிய தூய்மை பணியாளரை சரமாரியாக தாக்கிய கணவன் – மனைவி!

பெருங்குடி ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் கவிதா (36). பெருங்குடி மண்டலத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர், சக ஊழியர்களுடன் நேற்று காலை பள்ளிக்கரணை 189வது வார்டுக்குட்பட்ட நேரு நகர் 5வது தெருவில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், அந்த தெருவில் வசிக்கும் ஆனந்தன் (58), என்பவர், ‘என் வீட்டிற்கு வந்து குப்பையை சுத்தம் செய்ய வேண்டும்,’ என தெரிவித்தார். அதற்கு கவிதா, ‘இப்பகுதியில் தெருக்களில் உள்ள குப்பையை மட்டும்தான் அகற்றுகிறோம். வீடுகளுக்கு சென்று குப்பையை … Read more