டெல்லியில் சீன நிறுவனங்கள் மீது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

Default Image

சீன நிறுவனங்கள் மீது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை.

டெல்லியில் உள்ள சீன நிறுவனங்களில், சில இந்தியர்களுடன் சேர்ந்து ஹவாலா மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபடுவதாக வருமான வரி துறைக்கு புகார் வந்ததையடுத்து, வருமான வரித்துறையினர் டெல்லியில் சந்தேகத்திற்கு இடமான சீன நிறுவனங்கள் மீது அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், 40 போலி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு ஆயிரம் கோடி ரூபாய்க்கு பண பரிவர்த்தனை நடந்திருப்பதும், இதில் வங்கி ஊழியர்கள், ஆடிட்டர்களுக்கு தொடர்பிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஆயிரம் கோடி ரூபாய் ஹவாலா மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்