இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கும் அதியா ஷெட்டிக்கும் விரைவில் திருமணம்

Default Image

கே.எல்.ராகுலுக்கும் அதியா ஷெட்டிக்கும் 2023 ஜனவரியில் சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியும் காதலித்து வரும் நிலையில், தற்போது இந்த ஜோடி அவர்களின் உறவில் அடுத்தக்கட்ட நிலைக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்திலோ இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருமண விழாவானது கண்டாலாவில் உள்ள அதியாவின் தந்தை சுனில் ஷெட்டியின் பங்களாவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ராகுலும் அதியா ஷெட்டியும் ஒன்றாக பாந்த்ராவின் புதிய குடியிருப்பில் குடிபெயர்ந்தனர். இதனைத்தொடர்ந்து தற்போது இருவரும் தங்களது திருமணத்திற்க்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்