இந்திய அணி அறிவிப்பு.. நடராஜன், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு..!

Default Image

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடர் தற்போது அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வவருகிறது.

இதுவரை நடைபெற்ற 4 டி-20 போட்டிகளில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று சமமாக உள்ளது. இதற்கு முன் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், சுப்மான் கில், ஸ்ரேயாஸ், சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்ட்யா, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), சாஹல், குல்தீப் யாதவ், க்ருணால்  பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், நடராஜன், புவனேஷ்வர் குமார், சிராஜ், பிரசீத் கிருஷ்ணா, ஷார்துல் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனால், தற்போது நடைபெற்று வரும் டி-20 தொடரில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்