70 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்து சென்னை தடுமாற்றம்..!

Default Image

சென்னை அணி 13 ஓவர் முடிவில் 61 ரன் எடுத்து 5 விக்கெட்டை இழந்து தடுமாறி விளையாடி வருகிறது.

இன்றைய ஐபிஎல் 2021 இன் 53 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச  மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு ப்ளெஸிஸ் இருவரும் களமிறங்கினர்.

வழக்கம்போல சிறப்பான ருதுராஜ் , ஃபாஃப் கூட்டணி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 12 ரன் எடுத்து ருதுராஜ் வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார். பின்னர், களம் கண்ட மொயீன் அலி டக் அவுட் ஆக ராபின் உத்தப்பா 2 , அம்பதி ராயுடு 4 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்து இறங்கிய கேப்டன் தோனி சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டு கொண்டுவருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோனி வந்த வேகத்தில் 2 பவுண்டரி எடுத்து 12 ரன் எடுத்து போல்ட் ஆனார்.

இதனால், சென்னை அணி 13 ஓவர் முடிவில் 61 ரன் எடுத்து 5 விக்கெட்டை இழந்து தடுமாறி விளையாடி வருகிறது. தற்போது களத்தில் ஜடேஜா 1*, ஃபாஃப் 29* ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்