இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 இறுதி ஆட்டங்கள் தேவை-யுவராஜ் கருத்து..!

Default Image
  • இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 இறுதி ஆட்டங்கள் தேவை என்று இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக கடந்த வியாழக்கிழமை இந்திய அணி இங்கிலாந்து சென்றது. தற்போது அங்கு இந்திய வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து இந்த போட்டியில் ஜூன் 18 ஆம் தேதி சவுத்தாம்டனில் விளையாட உள்ளது. மேலும், ஏற்கனவே இங்கிலாந்தில் நியூசிலாந்து 2 டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகின்றனர்.

இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ், இந்த சூழ்நிலையில் 3 இல் 2 சிறப்பான ஆட்டங்கள் தேவை என்று குறிப்பிட்டுள்ளார். ஏனென்றால், ஒன்றில் தோல்வியடைந்தால் மற்ற 2 ஆட்டங்களில் வெற்றிபெறலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், நியூசிலாந்து அங்கு இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருவதால், இந்த போட்டி அவர்களுக்கு அனுகூலம் தரக்கூடியதாக இருக்கும். இந்தியாவுக்கு 8 முதல் 10 பயிற்சி ஆட்டங்கள் இருந்தாலும், இது இந்தியாவிற்கு சற்று பின்னடைவை தரலாம். அதனால், 3 இறுதி ஆட்டங்கள் தேவை என்று கூறியுள்ளார். இதேபோன்ற கருத்தை இதற்கு முன்னர் இந்திய அணியின் தலைமை பயிர்ச்சியாளரான ரவி சாஸ்திரியும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்