அன்றைக்கு எட்டப்பன் இருந்தார்., இன்றைக்கு செந்தில் பாலாஜி இருக்கிறார் – முதல்வர்

Senthil Balaji has so far switched to a total of 5 parties, Chief Minister Palanisamy said during the election campaign.

செந்தில் பாலாஜி இதுவரை மொத்தம் 5 கட்சிகளுக்கு மாறியுள்ளார் என்று முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளார்.

கரூரில் எம்ஆர் விஜயபாஸ்கரை ஆதரித்து, முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவில் உருவாக்கப்பட்ட கட்சியை கவிழ்ப்பதற்கு, அன்றைக்கு எட்டப்பன் இருந்தார். இன்றைக்கு செந்தில் பாலாஜி இருக்கிறார். அதிமுக ஆட்சி கவிழ வேண்டும் என்று திட்டமிட்டு சதி செய்கிறார். அவரது கனவு ஒருபோதும் நினவாகாது என்று தெரிவித்துள்ளார்.

என்றைக்கும் தர்மம், நீதி, உண்மை இதுதான் வென்ற சரித்திரம் உண்டு, அதர்மம் என்ற சரித்திரம் கிடையாது. திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஏமாற்றுவதில் கில்லாடி என்றும் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது பல பொய்கள் சொன்னவர் எனவும் விமர்சித்துள்ளார். செந்தில் பாலாஜி இதுவரை மொத்தம் 5 கட்சிகளுக்கு மாறியுள்ளார். அடுத்து எந்த கட்சிக்கு போவார் என்று தெரியவில்லை. ஆனால், அதிமுக வேட்பாளர் ஐஎஸ்ஐ முத்திரை, அவர் போலி என்றும் கூறியுள்ளார்.