இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமரின் டிவிட்டர் கணக்கு பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
unknown nodeஇந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, அன்றைய தினம் தனது வாழ்க்கையாலும், பணிகளாலும் பிறருக்கு முன்மாதிரியாக திகழுகின்ற பெண்களிடம் தனது சமூக வலைதள கணக்குகளை ஒப்படைக்க இருப்பதாக அன்மையில் பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி பிரதமர் சம்பந்தப்பட்ட டிவிட்டர் கணக்கு சர்வதேச மகளிர் தினமான இன்று பெண் சாதனையாளர்களால் நிர்வகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுமட்டுமல்லாமல் பெண் சாதனையாளர்களுக்கு ‘நாரிசக்தி’ என்ற விருதினை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்குகிறார். இவ்விருது பெறுகின்ற சாதனை பெண்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.