நான் அடிக்கிறது போல் அடிக்கிறேன், நீ அழுவது போல் நடி – கேஎஸ் அழகிரி

KS Alagiri said the fear that the 7.5 per cent reservation would be jeopardized has come true.

7.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படும் என்று பயந்தது உண்மையாகிவிட்டது என்று கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நான் அடிக்கிறது போல் அடிக்கிறேன், நீ அழுவது போல் நடி என்பது போல் தமிழக அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தோடு பாஜக, அதிமுக அரசுகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன.

இவர்களின் தமிழர் விரோதப் போக்கிற்குத் தமிழக வாக்காளர் முடிவு கட்ட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. தேர்தலைக் கருத்தில் கொண்டே அதிமுக அரசும் 7.5% இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்துள்ளது தெளிவாகிறது. தேர்தலுக்குப் பிறகு 7.5% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படும் என்று பயந்தது உண்மையாகிவிட்டது என கூறியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

unknown node