இரண்டாம் எலிசபெத் மகாராணிக்காக காத்திருந்த மன்னரின் உடல்

Default Image

பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு தனது 96வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார்.

ராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 10 நாட்கள் துக்க அனுசரிப்பிற்கு பிறகு ராணியின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலும், ஒன்றறை வருடங்களுக்கு முன் இறந்த அவரது கணவரான பிலிப்பின் உடலும் அருகருகே அரசு மரியாதைக்கு பிறகு 19 ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மன்னரின் உடலுக்கு அருகே தனது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்பது இரண்டாம் எலிசபெத் மகாராணியின் விருப்பம் என்பதால் பொது மக்களின் அஞ்சலிக்கு பின்னர் இருவரின் உடல்களும் அருகருகே அடக்கம் செய்யப்பட உள்ளது.

கடந்த ஒன்றறை வருடமாக தி ராயல் வால்ட்டில் உள்ள சாப்பலில் மன்னர் பிலிப்பின் உடல் வைக்கப்பட்டிருந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்