Helicopter Crash:மலேசியாவின் லுமுட் நகரில் 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில்10 வீரர்கள் பலியாகினர்.
மலேசியாவில் கடற்படை பயிற்சியின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
மலேசிய கடற்படை தினத்தின் 90ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக 6க்கும் மேற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒத்திகையில் ஈடுபட்டன. அப்போது, 2 ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கீழே விழுந்து நொறுங்கும் பதற வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
unknown nodeகாலை 9.32 மணியளவில் இந்த கோர சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய RMN விசாரணைக் குழு அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோகமான சம்பவத்திற்கு மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
