இறுதி ஆண்டு மாணவர்களின் தேர்வுகள் குறித்து புதுச்சேரி பல்கலைக்கழகம் விளக்கம்.!

Default Image

வருகின்ற 21-ஆம் தேதி முதல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைபெறும் என புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரனமாக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதன் காரணமாக தேர்வுகள் நடத்தப்பட முடியாமல் போனதால் மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்வதாக பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது. ஆனால் கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு மறுத்துவிட்டது.

இந்நிலையில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இறுதி செமஸ்ட்டர் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில், தேர்வுகள் எப்போது நடைபெறும் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, யுஜிசி விதிமுறைபடி செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும் என்று கூறியது.

அந்த வகையில், இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் தேதியை மாற்றியதாக புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவிதுள்ளது. இதற்கு முன்பு இறுதி ஆண்டு தேர்வுகள் செப்டம்பர் 14 முதல் நடைபெறுவதாக இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் தற்போது செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்