செல்போனை போலீசில் ஒப்படைத்த டிடிஎஃப் வாசன்!!

Default Image

டிடிஎஃப் வாசன் : யூடியூப் மூலம் பிரபலமான  டிடிஎஃப் வாசன் மதுரை சுங்கச்சாவடி அருகே காரில் போன் பேசியபடி கார் ஓட்டியதற்க்காக அவர் மீது மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த மே 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஜாமீன் வழங்கும்போது ஜூன் 3 விசாரணைக்காக டிடிஎஃப் வாசன் தன்னுடைய மொபைல் மற்றும் ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் என்றும் அண்ணாநகர் போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தது.

இந்த நிலையில், செல்போன் பேசியபடி காரை ஓட்டிய வழக்கில் டிடிஎஃப் வாசன் தனது செல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். முன்னதாக ஆஜரானபோது செல்போனை ஒப்படைக்க 2 நாள் அவகாசம் கேட்டிருந்த நிலையில் தனது செல்போனை மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்