தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – 35 ஆம் கட்ட விசாரணை தொடக்கம்!

Default Image

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான 35ஆம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது.

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆணையத்தின் 34-வது கட்ட விசாரணை கடந்த ஆண்டு தொடங்கியது. இதில் ஆஜராகி சாட்சியம் அளிக்க 9 பேருக்கு சம்மன்அனுப்பப்பட்டிருந்தது. இதில் 6 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த என். வெங்கடேஷ் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்ததை தொடர்ந்து 34-வது கட்ட விசாரணையும் நிறைவடைந்தது. இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் 35-ஆம் கட்ட விசாரணை இன்று தொடங்கியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிசூடு கலவரத்தின்போது நெல்லை சரக டிஜிபி ஆக இருந்த கபில்குமார் நேரில் ஆஜராகியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்