‘இருக்கிற பொறுப்புக்கே வேலை இல்ல, இதுல மாநில பொறுப்பு வேற’ – முன்னாள் அதிமுக அமைச்சர்

Default Image

வன்னியர்களுக்கான 10.5 % இட ஒதுக்கீடில் முழுமையான தரவுகள் இல்லை என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கருத்து.

விழுப்புரம் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய  முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம், சமூக நீதி என்று கூறுகின்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடஒதுக்கீடு விவகாரத்தில் கவனம் செலுத்தாமல் இருக்கிறா அல்லது திட்டமிட்டு காலம் தாழ்த்துகிறாரா என்று தெரியவில்லை. சமீபத்தில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 2 முக்கிய பகுதி என்பது உள்ளது. அதில், மாநில அரசுக்கு இடஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளது என தெரிவித்தார்.

10.5 சதவீத இட ஒதுக்கீடில் முழுமையான தரவுகள் இல்லை. 30 ஆண்டு காலத்திற்கு முன் எடுக்கப்பட்ட அம்பா சங்கர் குழுவின் சாதிவாரிக் கணக்கெடுப்பு இப்போது ஏற்கக் கூடியதல்ல என்று தெளிவாக சொல்லியுள்ளது. மதுரை உயர் நீதிமன்றத்தில் முழுமையாக தரவுகள் அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்படவில்லை என குற்றசாட்டினார். மேலும் தமிழகத்தில் மின்வெட்டு குறித்து தமிழக அரசை விமர்சித்தார். இதனைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திடம், தற்போது மாவட்ட செயலாளராக உள்ளீர்கள், மாநில பொறுப்பு கேட்கப்பட்டதாக தகவல் வருகின்றதே என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, இருக்கிற பொறுப்புக்கே வேலை இல்ல, இதுல மாநில பொறுப்பு வேற என்று விரக்தியில் பதிலளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

VidaaMuyarachi - mk stalin
Vidamuyarchi
Marcus Stoinis
Vidamuyarchi Online Review
gold price
Thiruvannamalai TVK District secretary issue
Rohit sharma