மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் – இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

Default Image

கல்லூரி மாணவியருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார். 

அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார். தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் மகளிர் திருமண உதவித்திட்டம், அதிமுக ஆட்சியில் ‘தாலிக்கு தங்கம்’ திட்டமாக மாற்றப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டு, உயர்கல்வி கற்கும் மாணவியருக்கு, உயர்கல்வி உறுதி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து முடித்து, உயர்கல்வியில் சேரும் மாணவியருக்கு மட்டும், மாதம் ரூ.1,000 உதவி தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து உதவி தொகை பெற விரும்பும் மாணவியரின் விபரங்கள் ஆன்லைனில் சேகரிக்கப்பட்டன. அதன்படி, அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து முடித்த மாணவியர் என 2.5 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில், முதற்கட்டமாக 60 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு, கல்வி உதவி தொகை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு புதுமைப்பெண் திட்டம் என தமிழக அரசு பெயர் சூட்டியுள்ளது. இந்த நிலையில், கல்லூரி மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த உதவித்தொகை நேரடியாக மாணவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்