நாடோடி பழங்குடி மக்களுக்கு அனுமதி மறுப்பு.. படம் பார்க்க அரசு சார்பில் ஏற்பாடு.!

Default Image

கடலூர்: இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மே 31-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘கருடன்’.

இந்நிலையில், கடலூரில் கருடன் படம் பார்க்க வந்த 20க்கும்  மேற்பட்ட நாடோடி பழங்குடி மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடலூர் மாவட்டம் அண்ணா பாலம் அருகே உள்ள ‘நியூ சினிமா’ திரையரங்க நிர்வாகம் டிக்கெட் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த நாடோடி பழங்குடி மக்கள் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில், உடையை காரணம் காட்டி தியேட்டருக்குள் அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் அளித்தனர். பின்னர், காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவை பெற்று கொண்ட கோட்டாட்சியர், தனது காரிலலேயே அவர்களை ஏற்றி சென்று திரையரங்கிற்கு அழைத்து வந்தார். அங்கு வட்டாட்சியர் நடவடிக்கையை அடுத்து நாடோடி பழங்குடி மக்கள் டிக்கெட் பெற்று கருடன் படம் பார்த்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்