காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது! புதிதாக வளிமண்டல சுழற்சி ஏற்பட வாய்ப்பு!

Default Image

அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு அந்தமான் கடலோர பகுதிகளில் புதிதாக வளிமண்டல சுழற்சி ஏற்பட வாய்ப்பு.

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து வட தமிழ்நாடு, அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு அந்தமான் கடலோர பகுதிகளில் புதிதாக வளிமண்டல சுழற்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்