தமிழ்நாட்டில் 40 இடங்கள்! இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

Default Image

வரி ஏய்ப்பு புகார் எழுந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை.

தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பாமாயில், பருப்பு சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் பி.டி.எஸ் கருவிகள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான சுமார் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிறுவனங்கள் தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வந்த புகாரை அடுத்து வருமானவரித்துறை சோதனையை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் பாமாயில் மற்றும் பருப்பு சார்ந்த தொழிற்சாலைகளில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனை, இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்