“சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் ” : நயினாா் நாகேந்திரன்

Default Image

“சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்” பாஜக மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

சங்கரன்கோவில் செங்குந்தா் முன்னேற்ற சங்கம் சாா்பில் சுதந்திர போராட்ட வீரா் திருப்பூா் குமரனின் 117 ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது.இதில் அனைத்து கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில்  திருப்பூர் குமரன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .இதில் பாஜக தென்மண்டல பொறுப்பாளர் நயினார் நாகேந்திரன் கலந்துக்கொண்டு திருப்பூர் குமரன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது :அதிமுகவில் முதல்வர், துணை முதல்வர் மோதல் என்பது அவர்கள் கட்சி சம்பந்தப்பட்ட விஷயம். அதைப் பற்றி கருத்து கூற முடியாது.அது அவா்களது உள்கட்சி பிரச்னை, சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் நிகழும் என்று கூறினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்