பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமாருக்கு சம்மன்!

Default Image

பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார் நாளை நேரில் ஆஜராக மத்திய குற்றப் பிரிவு போலீசார் சம்மன்.

பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார் நாளை நேரில் ஆஜராக மத்திய குற்றப் பிரிவு, (சைபர் கிரைம் போலீசார்) சம்மன் அனுப்பியுள்ளனர். சமூக வலைத்தளத்தில் தமிழக அரசு பற்றி அவதூறாக பதிவிட்டதாக நிர்மல் குமார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் புகார் அளிக்கப்பட்டது. அதாவது, பிரதமர் மோடி பசும்பொன் வருவதாகவும், தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றும் நிர்மல்குமார் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

இதனால், கலகம் செய்ய தூண்டுதல், பொது அமைதிக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் மற்றும் வதந்தி பரப்புதல் போன்ற பிரிவுகள் கீழ் பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நிர்மல் குமார் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று மத்திய குற்றப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்