11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை.!

Default Image

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க பள்ளிகல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகம், திரையங்குகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை மார்ச் 31 தேதி வரை மூட உத்தரவிட்டது. மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில், தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்க பள்ளிகல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்