சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு!

Default Image

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் காவலர் சாமதுரைக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் காவலர் சாமதுரைக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சாமதுரை தாயார் மருதகனி உயிரிழந்ததால் இறுதி சடங்கு செய்வதற்கு 3 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உயர் நீதிமன்றம் கிளை. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வணிகா் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் சிறையில் அடுத்தடுத்து மா்மமான முறையில் உயிரிழந்தனா்.

இந்த வழக்கு, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சோ்ந்த காவல் ஆய்வாளா் உள்பட 9 போலீஸாா் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் காவலர் சாமதுரைக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்