ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு – அரசு பதில் தர உத்தரவு

Default Image

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி கோரினால் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க காவல்துறைக்கு ஆணை.

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை குறிப்பிட்ட வளாகத்துக்குள் நடத்திக்கொள்ள பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு குறித்து தமிழக அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி கோரினால் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க காவல்துறைக்கு ஆணையிட்டுள்ளது. ஜனவரி 22, 29-ஆம் தேதிகளில் அணிவகுப்புக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க இருப்பதாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். எனவே, ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஜன.5க்கு தள்ளிவைக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்