2,642 விசாரணை கைதிகள் விடுவிப்பு – சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம்

Default Image

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக சிறையில் உள்ள கூட்டத்தை குறைக்க ஏதுவாக சிறிய குற்றங்களாக கருதப்படும் திருட்டு வழக்குகள், கூட்டுக் கொள்ளை, சதித் திட்டம் தீட்டுதல் போன்ற சிறிய குற்றங்கள் செய்தவர்களை மட்டும் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யலாமா என்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 12 மாவட்ட நீதிமதிகள் மதுரை மத்திய சிறைக்கு வந்து விசாரணை நடத்தி, சிறிய குற்றங்களுக்கான கைதான 51 கைதிகளுக்கு சொந்த ஜாமீன் வழங்கப்பட்டு மதுரை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மேலும் 2,642 விசாரணை கைதிகளை சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே விடுப்பில் உள்ள கைதிகளுக்கு பரோல் காலத்தை நீடிப்பது குறித்தும் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வந்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்