சிறையில் இருந்து கொண்டு ஒருவரால் வாக்களிக்க முடியுமா.?

Election 2024 - Jail

Election2024 : சிறைவாசிகள் இந்திய தேர்தல் சட்டத்தின் படி வாக்களிக்க தகுதி இல்லாதவர்கள் ஆவார். இந்தியாவில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கும் நாளை (ஏப்ரல் 19) முதல் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பூத் சிலிப் வழங்கும் வேலைகள், வாக்காளர்கள் எங்கு சென்று வாக்களிக்க உள்ளனர் என்ற விவரங்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. வாக்குசாவடி … Read more

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை! மீறினால் 10 லட்சம் அபாரம், 3 ஆண்டுகள் சிறை!

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை மீறினால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 லட்சம் அபராதம். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசரச் சட்டத்துக்கு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்த நிலையில், ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் ரம்மி விளையாட்டுகளை தடை செய்யும் தமிழக அரசின் அவசர சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார் இதையடுத்து, … Read more

கஞ்சா கடத்தல் – 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!

56 கிலோ கஞ்சா விற்க முயன்ற வழக்கில்,தேனியை சேர்ந்த 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  சென்னை பல்லாவரத்தில் 56 கிலோ கஞ்சா விற்க முயன்ற வழக்கில்,தேனியை சேர்ந்த 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில், போதைப்பொருள் கடத்தல் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்துவது மட்டுமல்லாமல், பயங்கரவாத நடவடிக்கைகளையும் … Read more

ஆண்கள் கண்டிப்பாக இரண்டு திருமணம் செய்ய வேண்டும்…! மீறினால் சிறை தண்டனை..!

ஆப்பிரிக்க நாட்டில் செங்கடலையொட்டி உள்ளது எரித்திரியாவில் ஆண்கள் கண்டிப்பாக இரண்டு திருமணம் செய்ய வேண்டும். மீறினால் சிறை தண்டனை. ஆப்பிரிக்க நாட்டில் செங்கடலையொட்டி உள்ளது எரித்திரியா நாடு. இந்த நாட்டில் அடிக்கடி போர் ஏற்படுவது வழக்கம். இதனால், அங்கு ஆண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், அங்கு பெண்கள் பலர் திருமணமாகாமல் உள்ளனர். இதனால் அந்த நாட்டில் புதிய சட்டம் ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்கள் அனைவரும் கண்டிப்பாக இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு 2 … Read more

#JustNow: கைதான தனியார் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் சிறையில் அடைப்பு!

மாணவி மரண விவகாரத்தில் கைதான கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேர் சிறையில் அடைப்பு. கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்ற வந்த மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் உயிரிழந்தது தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியர் ஹரிப்ரியா மற்றும் கணித ஆசிரியர் கிருத்திகா ஆகியோர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், மாணவி உயிரிழந்தது தொடர்பாக … Read more

66வயது முதியவருக்கு 81ஆண்டுகள் சிறை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

15 சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 66 வயது முதியவருக்கு 81 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, 2.2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. நாளுக்கு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கேரளாவில், திருவனந்தபுரத்தில் 15 வயது சிறுமி உடல் நலக்குறைவு காரணமாக … Read more

குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி மற்றும் என்சிபி தலைவர் ரேஷ்மா ஆகியோருக்கு 3 மாத சிறை தண்டனை ..!

குஜராத் மாநிலத்தில் உள்ள தலித் சமுதாய மக்களுக்காக போராட்டங்களில் ஈடுபட்டு வருபவரும், எம் எல் ஏவுமாகிய ஜிக்னேஷ் மேவானி அவர்கள் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். கடந்த மாதம் இவர் இரு முறை கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியேறி உள்ளார். கோட்சேவுடன் பிரதமரை ஒப்பிட்டு பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியேறிய அன்றைய தினமே, பெண் காவலர் ஒருவரை தாக்கியதாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக … Read more

முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கருக்கு 2 1/2 ஆண்டுகள் சிறைத்தண்டனை …!

 54 வயதுடைய முன்னாள் டென்னிஸ் வீரரும், மூன்று முறை விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவருமாகிய போரிஸ் பெக்கர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். ஜெர்மனியை சேர்ந்த இவர் ஒரு காலகட்டத்தில் சிறந்த டென்னிஸ் வீரராக இருந்து வந்த நிலையில், தனியார் வங்கி ஒன்றில் கோடிக்கணக்காக பணம் வாங்கிவிட்டு அந்த கடனை திருப்பி செலுத்தாததால் தான் திவாலானவர் என பெக்கர் அறிவித்திருந்தார். ஆனால் போரிஸ் பெக்கர் பொய் சொல்லியதாகவும், அவரது வங்கி கணக்கில் இருந்த பணங்கள் அனைத்தையும் தனது … Read more

ஜம்மு காஷ்மீர் : காது கேளாத ஊமைப் பெண்ணை பலாத்காரம் செய்த நபருக்கு 8 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை!

ஜம்மு காஷ்மீரில் உள்ள உதம்பூர் பகுதியை சேர்ந்த காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத சிறுமியை நபர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து உதம்பூர் மாவட்டம் லடா பகுதியை சேர்ந்த நசீப் சிங் என்பவரின் மகன் கர்னைல் சிங் என்பவர் இந்த வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு எட்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அபராதம் … Read more

மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு …!

மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவரான ஆங் சான் சூகியின் ஆட்சி கடந்தாண்டு கலைக்கப்பட்டு, மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதன் பின் வீடு காவலில் வைக்கப்பட்டிருந்த சூகி மீது 11 ஊழல் குற்றச்சாட்டு புகார் உள்ளது. இந்நிலையில், நோபல் பரிசு பெற்ற ஒருவருக்கு எதிரான வழக்கில் 600000 டாலர் பணம் பெற்றதாக சூகி மீதுள்ள புகார் தொடர்பான தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன் படி அந்நாட்டு நீதிமன்றம் மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவர் சூகிக்கு எதிராக … Read more