புதியதாக விண்ணப்பித்த 2 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடக்கம்.!

சென்னை : மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியதாக உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.

Smart Card Ration Card

சென்னை :மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியதாக உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகை பணிக்காக கடந்த ஆண்டு ஜூலை முதல் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது. நியாயவிலைக் கடைகளில் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி, அரசு வழங்கி வரும் உதவித் தொகை, பேரிடர் கால நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு குடும்ப அட்டை அவசியமாகும்.

இந்நிலையில், ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்து நீண்ட நாள்களாக காத்திருந்த சுமார் 2 லட்சம் பேருக்கு புதிய அட்டை வழங்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் இனி அரசு திட்டங்களை பெறலாம்.