ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு – தமிழக அரசு புதிய உத்தரவு!

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்வதில் பிரச்சனை எழுந்தாலும், பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் கைரேகை பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், QR-ஐ ஸ்கேன் செய்தும், குடும்ப அட்டை எண்ணை விற்பனை முனையத்தில் பதிவு செய்தும், ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு தடையின்றி வழங்க வேண்டும் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கைரேகை பதிவு செய்யும் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் தொடரும் நிலையில், உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் … Read more

பாலியல் தொழிலாளர்களுக்கும் ரேஷன் கார்டு – உச்சநீதிமன்றம் அதிரடி..!

பாலியல் தொழிலாளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணியை உடனடியாக தொடங்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. “தர்பார் மகிளா ஒருங்கிணைப்புக் குழு” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கொரோனா ஊரடங்கினால் பாலியல் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது கடந்த ஆண்டு செப்டம்பர் 29 அன்று அடையாளச் சான்று கேட்காமல் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் வழங்க … Read more

குட்நியூஸ்…இனி ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம்,குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்கலைப் பெறலாம்- தமிழக அரசு அரசாணை வெளியீடு

மின்னணு ரீதியில் ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை உள்ளிட்டவைகளின் நகல்கலைப் பெறும் வசதியை செயல்படுத்தப்படுவதற்கான உத்தரவை பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையானது – காகிதமற்ற நிர்வாகத்தை அடையவும்,அனைத்து அரசுத் துறைகளாலும் டிஜிலாக்கர் அமைப்பை ஏற்றுக்கொள்ளும் வகையில்,இனி மின்னணு ரீதியில் ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை உள்ளிட்டவற்றின் நகல்கலைப் பெறும் வசதியை செயல்படுத்தப்படுவதற்கான உத்தரவை பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: … Read more

“இதனை சீர்குலைக்கும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டால்,அதிமுக கடுமையாக எதிர்க்கும் -ஓபிஎஸ் ஆவேசம்!

அனைவருக்கும் பொது விநியோகத் திட்டத்தை வழங்க முதல்வர் உறுதி செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். வருமானத்தின் அடிப்படையில் ரேசன் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து “அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் நோக்கத்தை சீர்குலைக்கும்” முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டால், அதனை அதிமுக கடுமையாக எதிர்க்கும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும்,இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல்: “நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாகத் தரப்படும்”; … Read more

#Breaking:பொங்கல் பண்டிகை:ரேசன் அட்டைதாரர்கள்,இலங்கை தமிழர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பொங்கலை சிறப்பாக கொண்டாட ரேசன் அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வருகிற 2022-ம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப (ரேசன்) அட்டைதாரர்களுக்கு பச்சரிசி,முந்திரி திராட்சை உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு  வழங்க … Read more

“விரல் ரேகை தெளிவின்றி இருந்தாலும் ரேசனில் உணவுப்பொருள் வழங்க வேண்டும்” – உணவுத்துறை அதிரடி உத்தரவு..!

ரேசன் அட்டைதாரர்கள் உணவுப்பொருட்களை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ரேசன் குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி உணவு பொருட்களை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.அதன்படி, கைவிரல் ரேகை சரிபார்த்து அதனடிப்படையில் இன்றியமையாப் உணவுப்பொருட்கள் விநியோகம் மேற்கொள்ளும் போது கைவிரல்கள் ரேகைகள் தெளிவில்லாமல் இருந்தாலோ அல்லது பயோமெட்ரிக்தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாகவோ இருந்தாலும் உரிய ஆவணங்களை சரிபார்த்து,உண்மையான அட்டைதார்களுக்கு உணவுப்பொருட்கள் தங்குதடையின்றி வழங்கப்பட வேண்டுமென ஏற்கனவே அநேக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இது … Read more

புதுச்சேரியில் ரேசன் அட்டைகளுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல்…!

புதுச்சேரியில் ரேசன் அட்டைகளுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல்வராக ரங்கசாமி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பின் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி அமைச்சரவை சார்பில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்குதல் மற்றும் … Read more

#Breaking:”காலதாமதமின்றி குடும்ப அட்டைகள்” – அதிகாரிகளுக்கு முதல்வர் அதிரடி அறிவிப்பு…!

குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு காலதாமதமின்றி அதனை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கூட்டுறவு,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் அவர்கள் அதிகாரிகளிடம் கூறியதாவது: “குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்குக் காலதாமதமின்றி குடும்ப அட்டைகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ரேசன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும்.அப்பொருட்களின் … Read more

#BREAKING: சர்க்கரை அட்டைகளை.. அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்.. தமிழக அரசு அறிவிப்பு..!

உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது வினியோகத் திட்டத்தில் தற்போது 5 லட்சத்து 80 ஆயிரத்து 298 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய குடும்ப அட்டைகளை அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் … Read more

குடும்ப அட்டை இருந்தால் ரூ.50.000 கடன் – செல்லூர் ராஜூ

குடும்ப அட்டை இருந்தால் போது கூட்டுறவு வங்கிகளில் எளிமையாக கடை பெறலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். ரேஷன் கார்டு இருந்தால் போதும் கூட்டுறவு வங்கிகளில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ரூ.50,000 பெற்று கொள்ளலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாடக்குளம் பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார். மேலும், முதல்வர் பழனிசாமி உத்தரவின்படி, கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதிகள் பெற எளிமையாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.