சென்னையில் விழாக்களை சிறப்புடன் முடித்துவிட்டு புறப்பட்டார் பிரதமர் மோடி.!

Default Image

சென்னையில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, தற்போது சென்னையை விட்டு புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி.

நேற்று 44வது சர்வதேச ஒலிம்பியாட் துவக்க விழா நடைபெற்றது. அதில், கலந்து கொள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் மோடி ,

நேற்று, மாலை செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் பின்னர் , இரவு பாஜக நிர்வாகிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில்,  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பலர்  கலந்துகொண்டனர் .

இன்று சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் பிரதமர் மோடியும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்

இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, தற்போது சென்னையை விட்டு புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி. அவரை அதிகாரிகள், பாஜக நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்