மருத்துவமனைகளை தயார் படுத்துங்கள்.. இங்கு மாணவர்கள் கூடக்கூடாது – மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவு!

Default Image

கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கூட்டக்கூடாது என மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவு.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார். மருத்துவ கல்லூரி வளாகத்தில் பெரிய அளவில் மாணவர்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அனைத்து சுகாதார பணியாளர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்து, பல்வேறு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் கொரோனா பரவல் ஏற்படுமோ என்கிற அச்சம் நிலவி வரும் நிலையில், அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

நாட்டில் டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் சற்று கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. சென்னை ஐஐடியில் மாணவர்கள் உள்பட 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை தெரிவித்திருந்தது. இருப்பினும் இந்த நிலை மாறும் என்றும் கொரோனா கட்டுக்குள் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் பதற்றம் தேவையில்லை, முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PM Narendra Modi’s stern warning
Chhattisgarh Naxal Encounter
Pahalgam terror attack video
Pahalgam Attack news
Kashmir Attack
america terrorist attack in kashmir