கொரோனா நோயாளியை கண்டுபிடித்த போலீஸ்.!

Default Image

டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 6-ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து 7-ஆம் தேதி அவருக்கு கொரோனா இல்லை எனக்கூறி அனுப்பப்பட்டார். ஆனால் பின்னர் வந்த சோதனை முடிவில் அவர்கள்கொரோனா  இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். போலீசார் தினமும் விளம்பரம் செய்து , போஸ்டர் ஒட்டியும் அந்த நம்பரை தேடி வந்தனர்.
இந்நிலையில் அந்த நபர் செங்கல்பட்டு  மாவட்டம் படாளம்  அருகே உள்ள லாரி ஷெட்டில் தங்கி இருப்பது தெரியவர பின்னர் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று அந்த நபரை ஆம்புலன்ஸ் மூலமாக  விழுப்புரம் முண்டியம்பாக்கம்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் அழைத்துச் சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்