துணை வேந்தரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு..!

பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த ஜெகநாதன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் காவல்துறையில் புகார் ஒன்றை  கொடுத்தார். அதில்” போலி ஆவணங்கள் தயாரித்து துணைவேந்தர் ஜெகநாதன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ‘பூட்டா்’ அறக்கட்டளை என்ற பெயரில் கல்வி நிறுவனத்தை தொடங்கி உள்ளனர் என தெரிவித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கருப்பூர் காவல்துறை கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி கைது செய்தது. போலீசாரின் விசாரணையை தொடர்ந்து துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மாஜிஸ்ரேட் தினேஷ்குமார், ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.

மிக்ஜாம் புயல் நிவாரண வழக்கு – விசாரணைக்கு ஏற்க மறுப்பு..!

இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு கடந்த 2-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், ” தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் உள்ளதாகக் கூறிய மாஜிஸ்திரேட் நீதிமன்றக் காவல்  மறுத்தது தவறு” என தெரிவித்தனர்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிப்பது முறையாக இருக்காது, மேலும், ஜாமீன் வழங்கியது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஜனவரி 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார்.

நெல்லை மேயர் விவகாரம் – நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

இந்நிலையில், இந்த இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது” சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளதால் துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை ரத்து செய்ய வேண்டும்.  ஜாமீன் ரத்து செய்ய கோரும் வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஜாமீன் மனுவை ரத்து செய்ய கோரும்  வழக்கு விசாரணை ஜனவரி 19-ஆம் தேதி எடுத்துக் கொள்வதாக நீதிபதி நிர்மல் குமார் தெரிவித்தார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்