ஆன்லைன் விளையாட்டில் குழந்தைகள் சிக்குவதற்கு பெற்றோர்களே காரணம்.! உயர்நீதிமன்றம் குற்றசாட்டு.!

Default Image

ஆன்லைன் விளையாட்டு, லாட்டரி , சூதாட்டம் ஆகியவை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் பெற முக்கிய காரணம் பெற்றோர்கள் தான். – உயர்நீதிமன்ற மதுரை கிளை.

ஆன்லைன் விளையாட்டு , ஆன்லைன் லாட்டரி பழக்கம், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் விளையாடுகிறார்கள், தற்கான விளம்பரங்களும் அவர்களை ஈர்க்கும் வண்ணம் அதிகரித்து வருகிறது. இதனால் தற்கொலைகள் கூட நடக்கின்றன. என நெல்லையை சேர்ந்த நபர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு பதிவிட்டு இருந்தார்.

இந்த ஆன்லைன் விளையாட்டு விளையாடுகையில், 18 வயத்துக்கு கீழ் உள்ளவர்கள் உள்ளே வராமல் இருக்க ஆதார் எண், பான் கார்டு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய உத்தரவிட வேண்டுமே எனவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணையில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஆன்லைன் விளையாட்டு, லாட்டரி , சூதாட்டம் ஆகியவை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் பெற முக்கிய காரணம் பெற்றோர்கள் தான். சிறார்கள் நலனில் அரசுக்கு இருக்கும் அக்கறையை விட பெற்றோருக்கு அதிகமாக இருக்க வேண்டும்.

அவர்கள் , தங்கள் குழந்தைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கி கொடுத்து விடுகின்றனர் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 2 வார காலம் ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்