பலம் பொருந்திய காளைகளோடு சீறிப்பாயும் பாலமேடு ஜல்லிக்கட்டு – மாடு முட்டியதில் ஒருவர் பலியான சோகம்

Default Image
  • கோலகலமாக துவங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டில் ஒருவர் பலியான சோகம்
  • ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட வந்தவரை  மாடு முட்டியதால் உயிரிழந்தார்.

தை மாதம் இரண்டாம் நாள் எப்போதும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழி ஏற்புடன் கோலகலமாக தொடங்கியது.காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டிகள்  மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.இந்நிலையில் 700 காளைகள் சீறிப்பாய உள்ளது. இதனை தழுவதற்காக 936 மாடுபிடி வீரர்கள் களத்தி உள்ளனர்.ஜல்லிக்கட்டு போட்டி தற்போது உறுதிமொழி ஏற்புடன் தொடங்கிய நிலையில் முதலில் கோவில் 7 காளைகள் அவிழ்த்து விட பட்டது.இந்நிலையில் களைகட்டிய பாலமேட்டு ஜல்லிக்கட்டில் ஒருவர் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டியினை கண்டு ரசிக்க வந்த பார்வையாளர் ஒருவரை மாடு முட்டியதில் அந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
Nayinar Nagendran
CM Break fast Scheme
china donald trump
Nainar Nagendran - R.S. Bharathi
rain news today
Nellai Iruttukadai Halwa shop