கிராம சபைக் கூட்டம் எப்போது? தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
ஜனவரி 26 குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
![Gramasabha TNgovt](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/01/Gramasabha-TNgovt.webp)
சென்னை: குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கிராம சபைக் கூட்டம் மதச்சார்புள்ள எந்த வளாகத்திலும் நடத்தக் கூடாது. கூட்டம் நடக்கும் இடத்தை முன்கூட்டியே கிராம மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “குடியரசு தினத்தன்று (26.01.2025) அனைத்து கிராம நடத்தப்பட வேண்டும். கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி குடியரசு தினத்தன்று காலை 11.00 மணி அளவில் நடத்த வேண்டும்.
குறைவெண் வரம்பின்படி, உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். வருகின்ற 26ம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள் விபரங்களை தெரியப்படுத்த வேண்டும். தங்கள் மாவட்டத்தில்உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
“கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்திடக் கூடாது. கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும்” மேலும், கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும். ‘Namma Grama Sathei Mobile Apo’ மூலம் உள்ளீடு செய்திட வேண்டும் எனவும். அது குறித்த அறிக்கையை 26.01.2025 அன்றே இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.