ஐஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகாரை விரைந்து விசாரிக்க உத்தரவு!

Default Image

சிபிசிஐடி விசாரணையை எதிர்த்து ஐஜி முருகன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

ஐஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகாரை விரைந்து விசாரித்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணையை விரைந்து விசாரித்து முடிக்க சிபிசிஐடி மற்றும் விசாகா கமிட்டிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிய ஐஜி முருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எஸ்பி புகார் அளித்திருந்தார்.

பெண் எஸ்பி புகாரை அடுத்து பாலியல் புகார் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. சிபிசிஐடி விசாரணையை எதிர்த்து ஐஜி முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். ஏற்கனவே அமைக்கப்பட்ட விசாகா கமிட்டி மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் தற்போதைய விசாகா கமிட்டி விசாரிப்பதில் ஆட்சபனை இல்லை என ஐஜி முருகன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பாலியல் புகாரை விரைந்து விசாரித்து முடிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்