கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் மூழ்கிய கார்-தந்தை, மகள் பரிதாப உயிரிழப்பு..!

Default Image

கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி கார் குளத்தில் சிக்கி, தந்தை மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகள்கள் ஷாமிலி மற்றும் ஷாலினி. மூவரும் ஈத்தாமொழி பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்ல ஆம்னி காரில் பயணித்துள்ளனர். அப்போது கருங்கல் என்ற பகுதியில் கோணம் அருகே ஆம்னி கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த குளத்திற்குள் சிக்கியது.

அதை பார்த்த பொதுமக்கள், உடனே காப்பற்ற முயற்சி செய்துள்ளனர். அந்த காரில் இருந்த ஷாலினி என்ற ஒரு மகளை காப்பாற்றியுள்ளனர். அதற்குள் கார் முழுவதுமாக குளத்திற்குள் மூழ்கியுள்ளது. பிறகு, தீயணைப்பு துறைக்கு தொடர்பு கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் காரை கயிற்றால் கட்டி மேலே எடுத்துள்ளனர். ஆனால், ராஜேந்திரன் மற்றும் ஷாமிலி இருவரும் காருக்குள் இறந்த நிலையில் கிடைத்துள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்