புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.. சாய்ஸ் இருந்தால் நல்லதுதான்! – அண்ணாமலை

K Annamalai

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 19ம் தேதி வெளியான லியோ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று, வசூல் சாதனையும் புரிந்து வருகிறது. இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட எந்தவொரு ப்ரோமோஷனும் இல்லாமல் வெளியான லியோ படம் இதுவரை வந்த விஜய் படங்களிலேயே அதிக வசூல் பெற்ற திரைப்படமாக லியோ உருவெடுத்துள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் சக்ஸஸ் மீட் (வெற்றி விழா) விழா நடைபெற்றது. இதில், தளபதி விஜயை பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருகை தந்தனர். அதிலும் குறிப்பாக விஜயின் குட்டி கதைக்காக்கவும், அவர் பேசும் மற்ற சூசக பதில்களுக்காகவும் காத்திருந்தனர்.

ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்.! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு.!

அனைவரும் எதிர்பார்த்ததுபோல், நடிகர் விஜயும் குட்டிக்கதை, சில விமர்சனங்கள், அரசியல், சில சூசக பதில்கள் கொடுத்து அரங்கத்தை அதிர வைத்தார். அப்போது, ஒரே புரட்சி தலைவர், ஒரே நடிகர் திலகம், ஒரே சூப்பர்ஸ்டார், புரட்சி கலைஞர், கேப்டன், ஒரே உலகநாயகன், ஒரே தல என பதிலடி கொடுத்தார்.

பின்னர், தளபதி என்றால் என்ன அர்த்தம். மக்கள் தான்  மன்னர்கள். நான் உங்கள் கீழ் இருக்கும் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன் என தனது அரசியல் பயணத்தை சூசகமாக கூறினார். இதையடுத்து, தொகுப்பாளினி 2026 (தமிழக சட்டமன்ற தேர்தல்) பற்றி கூறுங்கள் என கேட்டார்.

ஆனால், நடிகர் விஜய் 2026 உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டி இருக்குனு மழுப்பலாக பதிலளித்தார். மீண்டும் அதே கேள்விக்கு சீரியஸா பதில் சொல்லுங்கள் என கேட்க, “கப்பு முக்கியம் பிகிலு” என மறைமுகமாக அரசியல் குறித்த கேள்விக்கு தனது ஸ்டைலில் பதில் கூறினார் தளபதி விஜய். இவ்வாறு நடிகர் விஜய் சொல்வதை பார்த்தால் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் களம் இறங்குவது உறுதி என தெரியவருகிறது. இருப்பினும், நான் அரசியலுக்கு வருகிறேன் என்று நடிகர் விஜய் இதுவரை அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2026 சட்டமன்ற தேர்தல்.! ‘கப்பு முக்கியம் பிகிலு’ – விஜய் சூசக பதில்.!

தற்போது சமூகவலைத்தளங்களில் நடிகர் விஜயின் பேச்சு தான் வைரலாகி வருகிறது. அவரது அரசியல் பயணம் குறித்து தான் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பின்போது, அண்ணாமலையிடம் விஜயின் அரசியல் பயணம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் கூறுகையில், தமிழகத்தில் 30, 40 ஆண்டுகளாக அரசியலில் பழையவர்களே இருந்திருக்கிறார்கள். புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வந்து தனது கருத்தை நிலைநாட்ட வேண்டும். தமிழகத்தில் 3 கட்சிகள் இருப்பதற்கு பதில் 6 கட்சிகள் என சாய்ஸ் இருந்தால் நல்லதுதான். எல்லாருடைய சித்தாந்தத்தையும் மக்கள் பார்த்து முடிவு செய்து கொள்ளட்டும் என அண்ணாமலை பதில் அளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்