நீட் முறைகேடு : சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு சம்மன்

Default Image

நீட் முறைகேடு தொடர்பாக சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு தமிழக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.2018-ஆம்  ஆண்டு நீட் தேர்வு நடத்திய சிபிஎஸ்இ அதிகாரிகள் ஆஜராக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் வெளிமாநிலத்தில் நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்கள் விவரத்தை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த ‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்டம் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த முறைகேட்டில் சென்னையை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவர் உதித் சூர்யா உள்பட 15 பேர் போலீசார் கைது செய்துள்ளனர்.‘நீட்’ தேர்வு முறைகேடு தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில் தற்போது 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

2018-ம் ஆண்டு முறைகேடு நடந்ததாக சென்னை மருத்துவக்கல்லூரி ‘டீன்’ ஜெயந்தி சி.பி.சி.ஐ.டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சென்னை மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர் தனுஷ்குமாரையும், அவரது தந்தை தேவேந்திரனையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தனுஷ்குமார் ‘நீட்’ தேர்வில் முதல் 50 இடங்களுக்குள் வந்து தெரியவந்தது.

இவரது தந்தை தேவேந்திரன் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான கருங்கல் ஜல்லிகளை லாரிகள் மூலம் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதுவதற்கு தேவேந்திரன் இடைத்தரகர் மூலம் ரூ.20 லட்சம் லஞ்சமாக கொடுத்தது தெரியவந்தது. தனுஷ்குமாருக்காக பீகாரில் ஒருவர் இந்தியில் தேர்வு எழுதி உள்ளார்.

ஆனால் தனுஷ்குமாருக்கு இந்தி தெரியாது என்பதால் அவர் மாட்டிக்கொண்டார். இதனால் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்