“சாகித்ய அகாடமி விருதை” வென்ற கோவில்பட்டி எழுத்தாளர்.!

Default Image
  • தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005-ம் ஆண்டுக்கான “கூகை” என்ற நாவல் பரிசு பெற்றது.
  •  தற்போது சோ.தர்மனின் சூழ் என்ற நாவலுக்கு, 2019-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளரும், மூத்த படைப்பாளியுமான சோ. தர்மராஜ் எனும் இயற்பெயர் கொண்ட தர்மன், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகாவில் உள்ள உருளைகுடி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், வேளாண் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் விதங்களில் கரிசல் மண் சார்ந்த புதின, சிறுகதை எழுதி இருக்கிறார்.

மேலும் ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். சோ.தர்மன் எழுதிய “கூகை” என்ற நாவலுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005-ம் ஆண்டுக்கான பரிசு பெற்றது.

இந்நிலையில், அந்த வரிசையில், விவசாயம் செய்யும் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்த சூல் என்ற நாவலுக்காக 2019-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் சோ.தர்மனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்