காரைக்குடியில் பாராட்டை பெற்றுவரும் நாம் தமிழர் கட்சியினரின் நற்செயல்.!

Default Image

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதில் தமிழகம் கொரோனா பாதிப்பில் 2-ஆம் இடத்தில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கை கடுமையாக பின்பற்றுவது, பொதுமக்களின் சமூக இடைவெளி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது என அரசு தீவிர முயற்சி எடுத்துவருகிறது. 

இந்நிலையில் சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும் கபசுர குடிநீரை பருகவும் மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். 

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சுப்ரமணியபுரம் பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சியினர், தினமும் 2சுமார் 2000 பேருக்கு இலவசமாக கபசுர குடிநீரை வழங்கி வருகின்றனர். இதனை அப்பகுதி மக்கள் சமூக விலகலை கடைபிடித்து வாங்கி செல்கின்றனர். பெரியவர்களுக்கு 50 மிலியும், சிறியவர்களுக்கு 30 மிலியும் வழங்கப்படுகிறது. சிலர் வீட்டிற்கு பாத்திரத்தில் வாங்கி செல்கின்றனர். இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுவருகிறது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்