#JustNow: அமைச்சர் கார் மீது காலனி வீச்சு – 5 பேர் கைது

Default Image

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்ட 5 பேர் கைது என தகவல்.

மதுரை விமான நிலையம் வந்தடைந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு ராணுவ வீர்ரகள் மரியாதை செலுத்தினர்.இதன்பின் ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசின் சார்பில் மரியாதை செலுத்திய பின், பாஜக சார்பில் மரியாதை செலுத்துமாறு அறிவுறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர் காரை நிறுத்தி பாஜகவினர் அராஜகம் செய்ததாக கூறப்படுறது.

இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இந்த நிலையில், மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலனி வீசிய சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியபோது நிதியமைச்சரின் வாகனத்தின் மீது பாஜகவினர் காலனி வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

ராணுவ வீரர் உடலுக்கு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகே பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும் கூறியதால் பிரச்சனை என ஏற்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், அமைச்சர் சென்றபோது காரை நிறுத்தி அராஜகத்தில் ஈடுபட்டு காலனி வீசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காலனி வீசிய சம்பவத்தில் பாஜகவைச் சேர்ந்த பெண் நிர்வாகி உள்பட 5 பேரை கைது செய்து அவனியாபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்