#JustNow: கோடநாடு வழக்கு – அதிமுக நிர்வாகியிடம் விசாரணை!

Default Image

கோடநாடு வழக்கு தொடர்பாக அம்மா பேரவை கோவை மாவட்ட இணை செயலாளர் அனுபவ் ரவியிடம் விசாரணை.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் உள்பட 202 பேரிடம் விசாரணை என்பது தொடர்ந்து நடைபெற்றிருக்கிறது. இந்த நிலையில், இன்று கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அம்மா பேரவை கோவை மாவட்ட இணை செயலாளர் அனுபவ் ரவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பிரமுகர் அனுபவ் ரவியிடம் இன்று விசாரணை நடந்து வருகிறது.

இந்த விசாரணையானது கோவையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. தன்னிடம் விசாரணை நடத்த தடைகோரிய அனுபவ் ரவியின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் அதிமுக நிர்வாகி ஆறுக்குட்டி, அவரது குடும்ப உறவினர் மற்றும் உதவியாளர்களிடம் விசாரணை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்