#JustNow: 100 நாள் வேலை – ஒருநாள் கூலி ரூ.281 ஆக உயர்வு!
100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் 01-04-2022 முதல் ரூபாய் 281 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது, ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பு வாசிக்கப்பட்டது. அதில், ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒருநாள் கூலி ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்பட்டுள்ளது. ஆண், பெண் இருபாலாருக்கு ஒருநாள் கூலி ரூ.281 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் ஊரக உறுதி திட்டத்தில் கூலி உயர்வு குறித்து கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாளா்களுக்கான ஊதியத் தொகையில் மத்திய அரசானது 75%, மாநில அரசு 25% பகிா்ந்து கொள்கின்றன. அதன்படி, ரூ.674 கோடியே 84 லட்சத்து 82 ஆயிரத்தை மத்திய அரசு ஏற்கனவே விடுத்திருந்தது. 25% தொகையான ரூ.224 கோடியே 94 லட்சத்து 94 ஆயிரத்தை மாநில அரசு விடுத்திருக்கிறது. நிா்வாகச் செலவுகளுக்காக ரூ.49 கோடியே 32 லட்சத்து 18 ஆயிரம் ஒதுக்கப்பட்ட நிலையில், மொத்தமாக மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்துக்காக ரூ.949 கோடியே 11 லட்சத்து 94 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.