டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்… குரூப் 2 காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு!

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ தேர்வுகளில் கூடுதலாக 213 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டதன் மூலம் மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 2,540 ஆக அதிகரித்துள்ளது.

TNPSC Group2

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடமிருந்து ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுகள் குரூப் 2, குரூப் 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கூடுதலாக 213 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2,327 பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தற்போது மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2,540 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த செப்.14- ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வுக்கு , 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். ஆனால், அதில் 2.5 லட்சம் பேர் தேர்வை எழுதவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும், 2025 பிப்ரவரி மாதம் முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamil Nadu Finance Minister Thangam Thennarasu
TNBudget2025 - budget
Free laptop for College students
tidel park TN
Tamil Nadu Budget 2025
TN Budget 2025 for students
TNBudget2025