2,668 அடி உயர திருவண்ணாமலை தீபமலை தயார்.! இன்னும் சில மணிநேரத்தில் மகாதீபம்.!

Default Image

திருவண்ணாமலையில் மகாதீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் இன்னும் சில மணிநேரத்தில் ஏற்றப்பட உள்ளது.

இன்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் பிரதான கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  அதிலும் மிக முக்கியமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா பிரசித்திபெற்ற ஒன்றாகும்.

இன்று மாலை 6 மணிக்கு இங்கு மகாதீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது. இதனை காண தமிழகமெங்கிலும் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திருவண்ணாமலை வந்துள்ளனர்.

மக்களின் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மேலும், மற்ற போக்குவரத்து பார்க்கிங் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில மணிநேரத்தில் திருவண்ணாமலை தீப திருவிழா ஏற்றப்பட உள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்