சிலை கடத்தல் பிரிவு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை…!!
பணி ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடன் பணியாற்றும் சக காவல் அதிகாரிகள், ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் மீது பரபரப்பு புகார் கூறினர். இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் , சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் மறுக்கும் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்தது.