ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி – தமிழ்நாடு காவல்துறை

La policía de Tamil Nadu les deseó a todos un feliz año nuevo inglés.

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழ்நாடு காவல்துறை.

ஆங்கில புத்தாண்டையொட்டி கட்டுப்பாடுகளை தமிழ்நாடு காவல்துறையின் அறிவித்திருந்தது. அதாவது, தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் டிசம்பர் 31-ஆம் தேதி பொதுமக்கள் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டது.

31 ( நேற்று) இரவு முதல் 1-ஆம் தேதி அதிகாலை வரை பொது போக்குவரத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் உணவகங்கள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. மேலும் வீட்டில் இருந்தே புத்தாண்டை வரவேற்போம் என்றும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

நேற்றிரவும், இன்று காலையும் ஓரிரு சாலை விபத்துகள், சச்சரவுகள் தவிர தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு அமைதியுடன் நடந்து முடிந்தது. இதனால் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி, புத்தாண்டு வாழ்த்துகள் என்றும் கூறியுள்ளது.