முறையாக போனஸ் வழங்க வேண்டும்.! மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம்.!

Default Image

முறையான போனஸ் வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழக அரசு அறிவித்த பொங்கல் போனஸ், அகவிலை படியும் தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது எனவும், 2006 போனஸ் திருத்த சட்டதத்தின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 ஆயிரம் ரூபாய் வழங்ப்படுகிறது. அதே போல பொதுத்துறை நிறுவனத்தில் வேலை செய்வோருக்கு 7 ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்கபடுகிறது.

அதே போல தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஒருமாத ஊதியத்தை போனஸாக வழங்க வேண்டும். வருவாய் நிர்வாக உதவியாளர், சத்துணவு அங்கன்வாடி அரசு ஊழியர்களுக்கும் அரசு ஊழியர்கள் போல போனஸ், அகவிலைப்படியை 7வது மாதம் முதல் வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்