500 அரசு ஊழியர்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம்!

voting

Election2024: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் 500 அரசு ஊழியர்கள் ஏமாற்றம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற உள்ளதால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் விறுவிறுப்பாக வாக்கு செலுத்தி வருகின்றனர். இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் பிற்பகல் 3 மணி … Read more

தெலுங்கானாவில் ஒரே நாளில் 106 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்… காரணம் என்ன?

Telangana

Telangana: தேர்தல் விதி மீறல் காரணமாக 106 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்தது தேர்தல் ஆணையம். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. அதன்படி, மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இந்த சூழல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாகவும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் … Read more

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.. முதல்வர் ஸ்டாலின் உறுதி!

mk stalin

MK Stalin: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். நாட்டு மக்கள் மேல் உண்மையான அக்கறை கொண்ட நமது இந்தியா கூட்டணி அரசு மத்தியில் அமைந்தவுடன், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் இந்தியா கூட்டணிக்கு உங்களது ஆதரவைத் தாரீர் எனவும்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ, அப்போதுதான் ஆசிரியர் அரசு ஊழியர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்கும். கடந்த அதிமுக … Read more

அரசு ஊழியர்களுக்கு இன்பச்செய்தி! அகவிலைப்படியை 4% உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

dearness allowance

MK Stalin : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் தற்போது 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.  அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலித்து அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். Read More – தமிழகத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்படாது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட … Read more

முறையாக போனஸ் வழங்க வேண்டும்.! மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம்.!

முறையான போனஸ் வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழக அரசு அறிவித்த பொங்கல் போனஸ், அகவிலை படியும் தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது எனவும், 2006 போனஸ் திருத்த சட்டதத்தின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு … Read more

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

2016-ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு.  தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவிகிதம் உயர்த்தி, ஜனவரி 1 முதல் 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட கடந்த டிசம்பர் மாதம் 28ந-ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1ஆம் தேதி முதல் … Read more

#BREAKING: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – முதலமைச்சர் உத்தரவு!

தமிழக அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 17%ல் இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு மற்றும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க ரூ.8,894 நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதில், அகவிலைப்படி 17%ல் இருந்து 31% ஆக உயர்த்தப்பட்ட … Read more

No சான்றிதழ் … No சம்பளம் – பஞ்சாப் அரசு அதிரடி

தடுப்பூசி சான்றிதழ் விவரங்கள் வழங்கப்படாவிட்டால், பணியாளரின் சம்பளம் வழங்கப்படாது என்று பஞ்சாப் அரசு உத்தரவு. அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என்று பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, பஞ்சாப் அரசு ஊழியர்கள் தடுப்பூசி சான்றிதழை வழங்கவில்லை என்றால் அவர்களுக்கு சம்பளம் கிடைக்காது என அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒருவர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் அல்லது ஒரு டோஸ் மட்டுமே செலுத்தியிருந்தாலும், அவர்களுக்கு சம்பளம் … Read more

#DoandDie: செய்து முடித்துவிட்டு தான் சாக வேண்டும் – அரசு ஊழியர் சங்க மாநாட்டில் முதலமைச்சர் உரை!

அரசு ஊழியர்கள் இல்லையென்றால் அரசாங்கம் இல்லை என அரசு ஊழியர் சங்க மாநாட்டில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரை. சென்னை மதவாரத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் 14-ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம், அவர்கள் இல்லையென்றால் அரசாங்கம் இல்லை. அரசு ஊழியர்களுக்காக திமுக அரசு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. திமுக ஆட்சி அமைத்த போதெல்லாம் அரசு ஊழியர்களுக்கு துணையாக நிற்கும். ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் அரசு ஊழியர்களுக்காக ஏரளமான திட்டங்களை … Read more

இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.!

புதிதாக அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. புதிதாக அரசு பணியில் சேரும் அரசு பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சியினை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் கடந்த மாதம் 7-ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். இதன் மூலம் பவானிசாகர் சென்று பயிற்சி … Read more